Saturday, August 6, 2011

EMOTIONS

உணர்ச்சிகள்
                                 
           உணர்ச்சிகள் மனித குலத்தின்நுட்பமான பண்புகளுக்கு காரணமாகும்.
மகிழ்ச்சியிலும் அழுகிறோம். துக்கத்திலும் அழுகிறோம். உலக கோப்பையை வென்றபோதும்   அழுகிறோம்.ஜப்பானில் நிலநடுக்கத்தை தொலைகாட்சி பெட்டியில் பார்த்த போதும் அழுகிறோம்.


                                                                            
                                    உணர்ச்சிகள் என்பது மகிழ்ச்சியாகவோ ,கொண்டாட்டம் ,இன்பம்  அல்லது துன்பம்,இடர் ,கவலை யாகவோ இருக்கலாம்.உணர்ச்சிகள் இல்லாத வாழ்க்கை அழகாக இருக்காது. 
                                       
     உணர்வுகள்  உள்ளார்ந்த அனுபவம்.உடல் முழுக்க பரவுவது.உடலில் எந்த குறிப்பிட்ட உறுப்புகளில் மட்டும் உணரக்கூடியது  அல்ல. பரிட்சை முடிவை எதிர் நோக்கும் போதுஇறுக்கமாக இருப்போம். முடிவு தெரிந்தவுடன் தளர்ந்து விடுவோம்.மொத்தத்தில் உறுதியான விஷயங்களை எதிர் நோக்கும்போது தளர்வாக இருப்போம். உறுதியற்ற விஷயங்களை எதிர் நோக்கும் போது மனம் அலை பாயும். 

                                                              

                         மனிதனின்  தேவைகள் பூர்த்தியாகாத போது வெறுப்பின் உச்சகட்டத்திற்கு செல்கிறான். நீண்ட நாள் எதிர்பார்ப்பு நிறைவேறினால் உற்சாக மிகுதிக்கு செல்கிறான். 

             உணர்வுகளுக்கும் (feelings )  உணர்ச்சிகளுக்கும்(emotions ) வேறுபாடு உண்டு. உணர்வுகள் லேசானது.மெலிதான அதிர்வை உருவாக்கும்.ஆனால் நீண்ட காலம் இருக்கும்.உணர்ச்சிகள்  ஆழமானது. உடல் முழுக்க பரவுவது. ஆனால் சிறிது நேரம் மட்டுமே இருக்கும்.

  உணர்வுகள்--மன அழுத்தம் 
  உணர்ச்சிகள் --கோபம்,பயம்.

                    உணர்ச்சிகளற்ற  வாழ்க்கை  மரித்துப்போன வாழ்க்கைக்கு  சமம்


      உணர்ச்சிகள் இல்லாமல்  வாழ்க்கை இல்லை.  எல்லா உணர்ச்சிகள் கலந்ததுதான் வாழ்க்கை.ஒவ்வொரு நேரத்திலும் ஒவ்வொரு உணர்ச்சி.உணர்ச்சிகளின் கட்டுப்பாட்டில் நாம்      இருக்க கூடாது. நமது கட்டுப்பாடில் உணர்ச்சிகள் இருக்க வேண்டும்.   மொத்தத்தில் மிகையான உணர்ச்சிகளில் நாம்   இறுகி போக  கூடாது. சரியான நேரத்தில் சரியான உணர்ச்சிகளை  காட்டி  மென்மையாக இருக்கவேண்டும்.                                                      

Wednesday, February 2, 2011

MASLOW Hierarchy of Needs----II

தேவைகளின் நிலை
              
          இது முந்தைய பதிவின் தொடர்ச்சி....முந்தைய பதிவை படிக்காதவர்கள் வாசித்துவிட்டு வரவும்.
         மஸ்லா தேவைகளே வாழ்கையை நிர்ணயிக்கின்றன.அடுத்த நிலைக்கு செல்ல உந்துதலை அளிக்கின்றன.முதல் நிலையில் மனிதன் தனது உடலுக்கு தேவையான வற்றை பூர்த்தி செய்துகொள்கிறான்.அடுத்து பாதுகாப்பு தேவையான வருமானத்தை தேடுகிறான்.இவை பூர்த்தியான பின் தான் உணர்வுகளுக்கும் ,உணர்ச்சிகளுக்கும்   ஒரு பிணைப்பை தேடுகிறான்.காதல் ,திருமணம்,சொந்தம் பந்தம் இவையாவும் இந்த மூன்றாம் நிலை.
    அடுத்து சமூக அந்தஸ்து தேவை ஆகிறது.பலர் தான் இருக்கும் இடத்தில் மட்டும் பாராட்டுகளை பெற்று அது போதும் என எண்ணுகிறார்கள்.சிலர் அதையும் தாண்டி நாடு கடந்து கூட  புகழை பெறுகிறார்கள். நான்காவது நிலையையும் கடந்தவர்கள் சுயதேடலை  துவங்குகிறார்கள். 

சுயதேடல்  நிலை
   இந்த நிலையை அடைந்தவர்கள்  இந்த பிறவியை பூர்த்தி செய்தவர்கள் என கருதலாம்.
மஸ்லா சுயதேடலை அடைந்தவர்களின் குணங்களாக கீழ்க்கண்டவற்றை குறிப்பிடுகின்றார்.
1 .இவர்கள் ஒவ்வொரு விஷயத்திலும்  உண்மைக்கு அண்மையில் இருப்பார்கள்.
2 மற்றவர்களை மிகவும் அனுசரித்து செல்வார்கள்.மதித்து நடப்பார்கள்.
3 சிந்தனையிலும் நடத்தையிலும் தெளிவாகவும்  உயர்ந்தும் இருப்பார்கள்.
4 .எந்த விஷயத்திலும் பிரச்சனையை தீர்க்கும் நோக்கம் மட்டுமே இருக்கும்.தங்களை முன்னிலைபடுத்தும் நோக்கம் இருக்காது.அவர்கள் அணுகுமுறை தனித்தன்மை வாய்ந்ததாக இருக்கும்.
5 ஆழ்ந்த சமூக ஈடுபாடும் ,மனிதகுலத்தின் மேல் இரக்கமும் உடையவர்கள் .
6 .நகைச்சுவை உணர்வும் ,தத்துவமும் ,பொருள் பொதிந்த பேச்சாற்றல் உடையவர்கள்.
         இதையே Dr .ருத்ரன் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார். 
  இவர்கள் தன்னிறைவு,தெளிவு,நிம்மதி அடைந்தவர்கள்.பிறருடைய எதிர்பார்ப்புக்காக ஒப்பனை ஏற்கவேண்டிய  அவசியம் இல்லாதவர்கள்.தேவைகளை பூர்த்தி செய்துகொள்ளாமல்  தேவைகளே எனக்கு கிடையாது என்று பொய் சொல்லிகொள்ளதவர்கள்.இவர்கள் பிறரிடம் ஏமாறுவதில்லை.ஏமாற்ற நினைப்பதும் இல்லை.
            வசதிகள் வாய்ப்புகள் இல்லை என்ற புலம்பலிலேயே பலர் தேவைகளை நிறைவேற்றும் முயற்சியில் ஈடுபடுவதும் கிடையாது.ஒரு நிலையை பூர்த்தி செய்யும் முன்னரே அடுத்த நிலைக்கு அலைபாய அலைபவர்கள்தான் பொய்முகத்தோடு வாழ்ந்து தங்களையும் பிறரையும் துன்புறுத்துபவர்கள்,அரசியல்வாதிகளும் போலி சாமியார்களும் தான்.
குறைகளை ஒப்புகொள்வதில் தயக்கம் காட்டாது ,சுய தரிசனத்தில் வெட்கம் இல்லாமலும் இருந்தால் இந்த நிலை எல்லோருக்கும் சாத்தியம்.

Wednesday, December 8, 2010

Abraham Maslow-தேவைகளின் நிலை

MASLOW --  Hierarchy  of  Needs   
             ஆபிரகாம் மஸ்லா  அமெரிக்காவை சேர்ந்த மனித உளவியல் விஞ்ஞானி .மனிதனின் தேவை நிலைகளை பற்றிய ஒரு வடிவத்தை உருவாக்கி அது  ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் எப்படி தூண்டுகோலாக விளங்குகிறது என்பதை விளக்கினார்.


       நாம் அனைவரும் தேவைகளால் தூண்டப்படுகிறோம் .நமது அடிப்படையான தேவைகள் எல்லாமே பிறவியிலுருந்து உருவாக்கப்பட்டது.    
     தேவைகள் (needs ) பூர்த்தியடையும்போது ஒரு மனிதன் திருப்தியடைகிறான்.அடுத்து விருப்பங்கள் (wants ) தேவைகளாக மாறுகின்றன.தேவைகள் அதிகரிக்கின்றன..எனவே புதிய திருப்தி நிலைகளை அடைய வேண்டியுள்ளது.

   மனிதனுடைய தேவைகளை ஐந்து தொடர் நிலைகளாக பிரித்து விளக்குகிறார் மஸ்லா.ஒவ்வொரு நிலையும் பூர்த்தியாகும் போது  அடுத்த நிலையை பற்றி சிந்திக்கிறான்.அதனை அடையும் செயலில் இறங்குகிறான்.   
                
1 .உடலியல் தேவைகள்.(physiological  needs ).
         பிராண வாயு,உணவு,தண்ணீர் .இவை நமது  உயிர் வாழத் தேவையான அடிப்படை தேவைகள். 
2 .பாதுகாப்பு அல்லது வாழ்க்கை உத்தரவாத தேவை நிலை (safety  needs ).
          உடை ,வீடு ,சுகாதாரம் ,சொத்து ,பாதுகாப்பு ,உறுதி,சார்ந்திருத்தல் ,கவலை,குழப்பம் மற்றும் பயத்திலிருந்து விடுதலை .சட்டம்,ஒழுங்கு ...
       முதல்  நிலையான உயிர் தேவைகளை பூர்த்தி செய்த பிறகு பாதுகாப்பு தேவைகளை அடையும் செயலில் இறங்குகிறோம் .கிடைக்ககூடிய வசதிகள் தொடர்ந்து கிடைக்கும் என்ற உறுதி நிலை.
   குழந்தை பசியை ஆற்றியவுடன் ஓடி விளையாட துவங்குகிறது.விளையாடும்போது கீழே விழுந்தால் அழதுவங்குகிறது .நாம் தூக்கிவைத்துகொண்டால் அழுகை உடனே நின்றுவிடுகிறது.நம் கைகளில் அது பாதுகாப்பை உணர்கிறது.அந்த நிலைதான் இது.
3 .சமூக ஈடுபாட்டு தேவை நிலை (Love  and  belonging  needs )
    முதல் இரு நிலைகளும் பூர்த்தியானதும் தனிமையின் வேதனையை உணர்ந்து மற்றவர்களிடம் அன்பை செலுத்துவதிலும் ,அன்பை பெறுவதிலும் நாட்டம் கொள்கிறான் .மனைவி,குழந்தைகள் ,குடும்பம்,சுற்றத்தார்  ஆகியவற்றை உருவாக்குகிறான்

4 .சுய கௌரவ உணர்வு நிலை (self  esteem  needs ).
 தனக்கு உணவு ,வீடு ,குடும்பம் ,வேலை,வசதி  எல்லாம் கிடைத்த பிறகு சமுதாயத்தில் ஓர் இடம் உள்ளது என்று உணர ஆரம்பிக்கிறான்.இந்த உணர்வு மேலோங்கி நிற்கும் போது தன்னுடைய கௌரவத்தை சமுதாயத்திற்கு உணர்த்தும் நிலைக்கு செல்கிறான்.இதுவே சுய கௌரவ நிலை.ஒருவனின் தொழிலில் தொடர்ந்து வருமானமும் வசதியும் கிடைத்தாலே தன்னை பற்றிய மரியாதையை உணர்வை பெறுகிறான்.சமூகம் அந்த மரியாதையை அவன் மீது காட்டவேண்டும் என விரும்புகிறான் .
   சக ஊழியர்களிடம் மதிப்பு,மரியாதை,தலைமைத்துவம் ,பெருமை ....இவை எல்லாம் இந்த நிலைதான்.
 இந்த நிலை பூர்த்தியானால்தான் தன்னம்பிக்கை கிடைக்கும்.இல்லையேல் தாழ்வு மனப்பான்மைக்கு தள்ளப்படுகிறான் .
 5 .சுய தேடல் நிலை (self  actualisation  needs ) 
       இது அதி உற்சாக நிலை அல்லது உன்னத நிலை என்று சொல்லலாம்.தான் வாழ்க்கையில் செய்ய விரும்பியதை செய்து காட்டுவேன் என்ற உறுதி நிலை.தனது திறமைகள் முழுவதையும் செயலில் காட்டி தனது இலக்குகளையோஅல்லது சாதனைகளையோ அடையும் நிலை. இந்த பிறவியில் சாதிப்பது (born  to do ) அல்லது பிறவிகடனை அடைவதே இந்த நிலை.
        நமது உடலுக்கு தேவையான அனைத்தும் கிடைத்த  பிறகே பாதுகாப்பு நிலைக்கு வருவோம்.நாம் பட்டினியாக உள்ள போது நமக்கு மற்றவர்களிடத்து அன்போ ,காதலோ வராது.தலைவனுக்கு உயிரையே கொடுப்பேன் என்ற தொண்டனை  இரண்டு நாள் பட்டினி போட்டால் முதல் நிலைக்கு வந்து விடுவான்.  இந்த பிரமிட் வடிவத்தில் கீழுள்ள நிலை அகன்று உள்ளதை கவனியுங்கள்.அடுத்த நிலைகளின் முக்கியத்துவம் குறைந்துகொண்டே வரும்.ஒவ்வொரு நிலையும் பூர்த்தி ஆக ஆக அடுத்த நிலைக்கு செல்கிறோம் .சிலநேரங்களில் ஒரு நிலைக்கு அச்சுறுத்தல் வந்தால் கீழ் உள்ள நிலைக்கு தள்ளபடுகிறோம் .
   பூர்த்தி செய்யப்பட்ட நிலை ஒரு மனிதனை ஊக்குவிக்க வாய்ப்பில்லை.எந்த நிலை பூர்த்தி செய்யபடாததோ அல்லது அந்த நிலைக்கு அச்சுறுத்தல் உள்ளதோ அது மட்டுமே ஊக்கப்படுத்த உதவுகிறது.  

 மஸ்லா  உருவாக்கிய இந்த தேவைகளின் நிலை கோட்பாடு வாழ்க்கை மற்றும் வேலை சூழ்நிலைகளுக்கும்  பொருந்தும்.மனிதனின் தேவைகள் அளவற்றது.இயற்கையாக மீண்டும் மீண்டும் எழக்கூடியது. ஆனால் முழுமையாக பூர்த்தி அடைவதில்லை.
       உதாரணத்திற்கு ஒரு தொழிலாளிகள் நிறைந்த நிறுவனத்தை எடுத்துக்கொண்டால் ,இந்த கோட்பாடு எப்படி பொருந்துகின்றது என்று பார்ப்போம்.
          முதல் நிலை --------------      உணவுக்கு தேவையான கூலி ,காற்றோட்டமான         ஒய்வு           கூடம்   ,                                          வெளிச்சமுள்ள வேலை செய்யுமிடம்.
     இரண்டாம் நிலை( safety )--காப்பீடு.,சேம நல நிதி,ஓய்வூதிய திட்டம்,தொழிலாளர் சங்கம்                                  
   மூன்றாம் நிலை (belonging )--தொழிலாளிகளுக்கு    வருடாந்திர கூட்டம்(convention )   ,  தொழிலாளர்கள் குடும்ப விழா.                                               
  நான்காம் நிலை (self  esteem )---தொழிலாளர்களின் திறமைக்கு சவாலான வேலை வாய்ப்புகளை வழங்குவது,உருவாக்குவது

 இறுதி நிலை (self  actualisation )--சிறந்த தொழிலாளிகள் அல்லது தலைவர்களிடம் முடிவெடுக்கும்   உரிமை வழங்குவது ,புதிய விஷயங்களை கற்க வாய்ப்பு வழங்குவது .
இது தனிமனிதனிடம் இருந்து தான் உருவாகும்.நிறுவனம் வாய்ப்புகளை மட்டுமே உருவாக்கமுடியும்.
    இந்த பதிவின் நோக்கத்திற்கு வருவோமா. ஒவ்வொருவரும் எந்த நிலையில் இருக்குறீர்கள் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். இறுதி நிலையான  சுய தேடல் நிலைக்கு வருவதே  முக்கியம்...அவசியம்.  
   இரண்டு உதாரணங்களை சொல்ல விரும்புகிறேன்.
 சைதை துரைசாமி.

  இவர் ஒரு அரசியல் கட்சியில் பிரபலமாக இருந்தது அனைவரும் அறிந்த விஷயம்தான். 1984 ல்  சட்ட மன்ற உறுப்பினர் தேர்தலில் வெற்றி பெற்று 3 வருடங்கள் பணியாற்றினார் .கட்சியின் ஏராளமான  தொண்டர்களை (belonging ) ஈர்த்தார்.ஆளும் கட்சி உறுப்பினராக இருந்தாலும் 352 கேள்விகள் கேட்டு அனைத்து நாட்களும் சட்டமன்றத்துக்கு வந்த ஒரே நபர் என்ற சாதனையை (esteem )படைத்து ஆக்கபூர்வமான அரசியல்வாதி என்ற பெயர் பெற்றார். அதிகார வெறியும் ,பணத்தாசையும் பிடித்த அரசியலில் போலி ஜனநாயகத்தில் தான் மட்டும் ஒற்றை ஆளாக ஒன்றும் செய்ய முடியாது ; அரசியலில் நேர்மையாக இருக்கும் மிகச்சிலருடன் சேர்ந்து போராடுவதும் சாத்தியமாவதில் சில பிரச்சனைகள் எழலாம். ஆனால் நேர்மையான அரசு அதிகாரிகளினால் நல்ல அரசாங்கத்தை ஓரளவு உருவாக்கமுடியும் என்று முடிவெடுத்து  தனது சம்பாத்தியத்தை  செலவழித்து முழுவதும் இலவசமாக மனித நேயம் பயிற்சி பள்ளியின் மூலம் சிறந்த IAS ,IPS  அதிகாரிகளை உருவாக்கும்  உயரிய நோக்கத்துடன்(self actualisation) செயலாற்றும் சைதை துரைசாமி சிறந்த மனிதர்.
  ரஜினிகாந்த் 
  சாதாரண பஸ் கண்டக்டராக இருந்து நடிகராக வேண்டும் என்ற லட்சியத்தில் நிறைய முயற்சி எடுத்து திரை உலகில் நுழைந்தார் ரஜினிகாந்த் .     எல்லா சொத்து சுகங்களையும்(safety needs)  திரைப்பட உலகின் மூலம் சம்பாதித்து  ,ஏராளமான ரசிகர்களையும்(belonging) தனது ஸ்டைல் நடிப்பின் காரணமாக ஈர்த்து ,திரையுலகில் வசூல் சாதனை(esteem) புரிந்தார்.தற்போது வசதி வாய்ப்புகளின் உச்சத்தில் இருந்தாலும்    ஆடம்பரத்தை வெறுத்து  தனது சுய தேடலுக்காக ஒரு சாதாரண மனிதனாக தனது நண்பர்களுடன் பயணம் செய்யும்    ரஜினியும் ஐந்தாம் நிலையை அடைந்தவர்தான். 
       நீங்கள் உச்சகட்ட நிலையை அடைந்து  உங்களது   எதிர்காலத்தை பயனுள்ளதாக ஆக்க முயற்சிக்கலாமே .....                                                                  

Saturday, October 16, 2010

ஒடு..... ஒடிக்கொண்டேயிரு

ஒரு சிங்கம் தினமும் விழித்தவுடன் தனது இரைக்காக மானின் பின்னால்ஓடுகிறது.மான் விழித்தவுடன் சிங்கத்திடம் இருந்து தப்பிபதற்காக ஓடுகிறது .இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால்  நீங்கள் சிங்கமாக இருந்தாலும் சரி ....அல்லது மானாக இருந்தாலும் சரி ..அது ஒரு விஷயமே இல்லை.   
       நீங்கள் ஓடிக்கொண்டேயிருக்கவேண்டும் ....இல்லையென்றால்? ...... 

Sunday, October 10, 2010

johari window- சுய மதிப்பீட்டுக்கான வழி


ஜோஹரி விண்டோ 
         1950 ல் கலிபோர்னியாவில் ஜோசப் லுப்ட் மற்றும் ஹாரி இன்கம்  ஆகியோர் மனித ஆளுமை பற்றி நடத்திய ஆராய்ச்சியின் விளைவே இந்த தத்துவம்.இது நமது ஆளுமையை அளவிடுதல்  மட்டும் அல்லாது நாம் எப்படி வெளிப்படுத்துகிறோம் என்பதை தெளிவாக்குகிறது.           

           நமது ஆளுமையை   A  B  C  D நான்கு சதுரங்களாக பிரித்துகொள்வோம் .ஒரு பக்கம் நான். ஒரு பக்கம் மற்றவர்கள்.ஒவ்வொரு பக்கமும் தெரியும் ,தெரியாது என பிரிக்கப்பட்டுள்ளது.                    

  
  
 

A . arena (open ) உங்களை பற்றி உங்களுக்கும் தெரியும்.மற்றவர்களுக்கும் தெரியும்.இது உங்களின் பலம் மற்றும் பலவீனம்.முக்கியமாக நீங்கள் மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள அனுமதிக்கும் குணநலன்கள் அல்லது திறந்தபுத்தகமாக  இருக்கவிரும்புவது  
B .blind . உங்களை பற்றி உங்களுக்கு தெரியாதது.ஆனால் மற்றவர்களுக்கு தெரிந்தது .இது உங்களின் நல்ல மற்றும் கெட்ட நடத்தைகள் (behaviour ).உதாரணமாக கோபப்படுவது ,திமிராக பேசுவது .உங்களை பற்றிய அறியாமை.முக்கியமாக மற்றவர்கள் நம்மிடம் நடந்து கொள்ளும் விதம் இதை பொறுத்தே அமையும்.
 C closed .உங்களை பற்றி உங்களுக்கு தெரியும் ஆனால் மற்றவர்களுக்கு தெரியாது .இது உங்களின் ரகசியம்,ரகசிய திட்டம்,சூழ்ச்சி ..உங்கள் ஆழ் மனதுக்குள் இருப்பது. 
 D dark உங்களை பற்றி உங்களுக்கும் தெரியாது.மற்றவர்களுக்கும் தெரியாது..இது உங்களின் உண்மையான திறமை.(inherent  potential )உணர்வுகள் ,அறிவுக்கூர்மை கட்டுபடுத்தப்பட்ட நடத்தை அல்லது  உளநிலை .இந்த பகுதியை உங்களின் அனுபவத்தின் மூலமே கண்டறிய முடியும்.இதற்க்கு நீண்ட காலங்கள் ஆகலாம்.
      சரி. இப்போது உங்கள் ஆளுமையை பற்றிய வரைபடத்தை வரைய துவங்குங்கள்
அடுத்து நாம் என்ன செய்ய வேண்டும்.  
A   .உங்களின்  பலம் மற்றும் பலவீனங்களை பட்டியலிடுங்கள் .மற்றவர்களுக்கு தெரியும் என்பதை உறுதி படுத்திகொள்ளுங்கள்.இந்த பரப்பின் அளவு அதிகரிக்கபடவேண்டும்.

 B .உங்களை பற்றி நீங்கள் அறியாதவற்றை உறவினர்,நண்பர்கள் ,சக ஊழியர்கள் ஆகியோருடன் கலந்தாலோசனை  செய்யுங்கள். இதில் மிக முக்கியம் எதுவென்றால் நீங்கள் feedback கேட்கும் நபர் உங்கள் நலனில் உண்மையான அக்கறை கொண்ட நபராக இருத்தல் அவசியம்.உங்கள் தவறுகளை திருத்திகொள்ளுங்கள் ..இந்த பரப்பு இருக்கவே கூடாது.முழுவதையும் குறைக்க முயற்சி செய்யவும்.    

 C .இது உங்கள் ரகசிய இடம்.ரகசியங்கள் காப்பாற்றப்படவேண்டும்.ரகசிய திட்டங்கள் போட்டி நிறைந்த உலகில் அவசியமான ஒன்றே.நோக்கம் நல்லவையாக இருக்கவேண்டும்.ஆனால் எல்லாமே ரகசியமானது எனில் உங்களை யாரும் நம்ப மாட்டார்கள்.இந்த மாதிரி நபர்கள் உங்கள் நட்பு வட்டாரத்திலும் இருக்கலாம்.மற்றவர்களின் உதவியை பெற நம்பிக்கை அவசியம்.
     இந்த பரப்பு நிச்சயம் அவசியம். ஆனால் குறைந்தபட்சம் ஆக்குதல் முக்கியம்.
 D .உங்களை பற்றி உங்களுக்கும் தெரியாமல் மற்றவர்களுக்கும் தெரியாமல் இருப்பது எந்த பிரயோஜனத்தையும் தராது.உங்கள் அனுபவத்தின் மூலமே கண்டறியமுடியும்.        இதற்க்கு அருமையான உதாரணமாக  7 G ரெயின்போ காலனி படத்தின்  காட்சியை கூறலாம்.ரவிகிருஷ்ணா படிக்க மாட்டார்.ஊர் சுற்றுவார்.மொத்தத்தில் உருப்படாதவர்.சோனியா அகர்வால் ஒரு கம்பெனிக்கு அழைத்துசெல்வார்.நேர்காணலில் தோல்வி அடைந்தவரை கோபப்பட்டு ஆத்திரத்தில் திட்டிவிட்டு ஒரு நிமிட யோசனைக்கு பிறகு  இவனுக்கு  டூ வீலரை கழற்றி மாட்ட தெரியும் என்று சொல்லுவார்.
உங்களது அனுபவமும் ,நீண்ட காலம் அருகில் இருக்கும் நபர்களின் மூலமே உணரமுடியும்.இந்த பரப்பை முழுவதும் நீக்க முடியாது.முடிந்த அளவுக்கு குறைத்து பாருங்கள். 

உன்னுள் நீ

நீ ....ஒரு மகத்தான மனிதன் ....மகத்தான சக்தி ..உங்களை பற்றி நீங்கள் தெரிந்து கொள்வது அவசியம் மட்டுமல்ல. அவசரமும் கூட ...இந்த பிறவி ஒரு வாய்ப்பு.நாம் பயன்படுத்திக்கொள்ள நம்மை மேம்படுத்திக்கொள்ள வேண்டும்.
             வாழ்க்கை  மேம்பட எத்தனையோஅறிஞர்கள்கூறியுள்ளார்கள்.... ..எழுதியுள்ளார்கள்...அதில் எனக்கு கிடைத்த விஷயங்களை எளிய நடையில் எளிய தமிழில் உங்களுக்கு வழங்குவதே எனது ஆவல்.                 
                என்னை ஊக்கபடுத்த உங்களது மேலான ஆலோசனைகளையும் பின்னூட்டங்களையும் அதிகமாக எதிர்பார்க்கிறேன் ..